FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Tuesday, November 17, 2015



  நமது அமைப்பின் 12ம் நிகழ்வு பயணம் பனையப்பட்டி SMMAR அலமேலு அருணாச்சலம் உயர்நிலைப்பள்ளி நோக்கி சென்றோம். அங்கே மாணிக்கம் அய்யா மற்றும் சண்முகம் அய்யா இருவரும் மரக்கன்று நடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அவர்களுக்கு அமைப்பின் சார்பில் நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.

  காலை 7.00 மணியளவில் பயணம் துவங்கியது. 5.00 மணியளவில் இருந்தே சரியான மழை. இதற்குத்தானே அனைத்தும் என்று ஒருபுறம் மகிழ்வாய் இருந்தாலும், என்ன செய்யப்போகிறோம் என்ற பதற்றமே மிஞ்சியிருந்தது.

  சரியாக 6.00 மணியளவில் கஸ்தூரி அய்யா இரு மகிழுந்துகளை தயார் செய்தார். அதில் நமது உறுப்பினர் கார்த்தி அய்யா அவர்களின் மகிழுந்தும் ஒன்று.இன்னுமொரு மகிழுந்து அவருடைய சகோதரியுடையது என்றார். இவர்கள் இருவருக்கும் அமைப்பின் சார்பில் நன்றிகள்.

  காலை 7.30 மணியளவில் பள்ளி வளாகத்திற்குள் 5 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கு அனுமதி அளித்த தலைமையாசிரியர் உட்பட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள். இதுவரை விதைக்கலாம் அமைப்பின் மூலமாக சுமார் 183 மரக்கன்றுகள் விதைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறோம்.

  நமது அமைப்பின் 13ம் பயணத்தில் திருநகர் பகுதிக்கு செல்லவிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.

நன்றி.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts