FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Saturday, November 07, 2015



விதைக்கலாம் அமைப்பின் ஏழாம் நிகழ்வில் இன்று (11-10-2015) கம்பன் நகரில் திரு. எஸ். வெங்கடசுப்ரமணியன் அய்யா அவர்களின் வீட்டின் முன்பாக 5 மரங்கள் நடப்பட்டன. அவருடைய துணைவியார் மற்றும் அவருடைய மகன் செல்வன். சுப்பிரமணியன் கிரி ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பாக நடத்த உதவி புரிந்தனர். அவர்களுக்கு அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
அதன்பின் நம்முடைய அமைப்பின் சிறப்பு நிகழ்வாக வலைபதிவர் சந்திப்பு திருவிழா 2015 முன்னிட்டு நிகழ்சி நடைபெறும் இடமான ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தின் பின்புறமுள்ள தேவாலயத்தில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த சிறப்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்து விதைக்க்கலாமிற்கு வாய்ப்பு வழங்கிய திருமிகு. முத்துநிலவன் அவர்களுக்கும் ஏனைய வலைப்பதிவர் சந்திப்பு குழுவிற்கும், வலைப்பதிவர் நிகழ்விற்கு வருகை தந்து விதைக்கலாமை முதல் நிகழ்வாக ஏற்படுத்தி தந்த அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வலைபதிவர்களுக்கும் ஏனைய நல்ல உள்ளங்களுக்கும் விதைக்கலாம் அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துகொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
நிகழ்வில் விதைக்கலாம் உறுப்பினர்கள் சந்தோஷ், பாக்கியராஜ், கஸ்தூரி ரெங்கன், பாண்டியன், அப்துல் ஜலில், மணி சார், காசிப்பாண்டி, UK கார்த்திகேயன், பிரபாகரன், ஸ்ரீதரன், வீரமாத்தி சுரேஷ், நாகநாதன், பழ. சுகந்தராஜன், நாகபாலாஜி, ஸ்ரீமலையப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கடுத்த சிறப்பு நிகழ்வு கிள்ளனூரில் நடைபெருவதைப்பற்றி அமைப்பினருக்கு தெரிவிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts