FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Saturday, February 27, 2016

விதைக்கலாம் அமைப்பின் 26ம் நிகழ்வு வாராப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.. இந்நிகழ்வில் 11 மரக்கன்றுகள் நடப்பட்டன.


நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாராப்பூர் அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திரு. கருப்பையா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.. இளம் மாணவர்களும் வழக்கம் போல இந்நிகழ்வில் நிறைய பேர் கலந்து கொண்டு நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்தனர்.
நிகழ்வுக்கு தனது டெம்போ ட்ராவலர் வாகனத்தை நட்பின் அடிப்படையில் வழங்கியிருந்தார் Pudukkottai Arunmozhi அவர்கள்..அவருக்கு இந்த இடத்தில் நம் அமைப்பு சார்பாக நன்றிகள் பல
நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
இந்நிகழ்வில் நம் அமைப்பு சார்பாக சிவக்குமார் , சந்தோஷ், மணி சார், மலையப்பன், UK கார்த்தி, காசிபாண்டி, ராமலிங்கம், பாலாஜி, பாக்கியராஜ், பாஸ்கர், குருமூர்த்தி, நாகநாதன் கலந்துகொண்டனர்
நிகழ்வு முடிந்து வரும் வழியில் பெருங்களூர் அஞ்சலக வளாகத்தில் ஏற்கனவே நட்டு வைத்திருந்த கன்றுகளை ஆய்வு செய்து வந்தோம்.. எல்லா கன்றுகளும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன என்பதை அறிந்து மகிழ்வுடன் வீடு திரும்பினோம்..
வாருங்கள் நட்புகளே தொடர்ந்து விதைக்கலாம்..

Related Posts:

  • விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வு     22/11/2015 இன்று காலை ஆறரை மணிக்கு விதைக்கலாம் இயக்கத்தின் பயணம் துவங்கியது. மழை மீண்டும் வலுக்க வேறு வழியே இல்லாமல் ராயல் பேக்ஸில் முடங்கினோம். சிறிது நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு.     … Read More
  • விதைக்கலாம் அமைப்பின் 24ம் நிகழ்வு நமது விதைக்கலாம் 24வது நிகழ்வு பொன்னமராவதி அருகே மலையான்ஊரணி கரையில்  நடைபெற்றது.  நமது  விதைக்கலாம் அமைப்பின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பல்வேறு முக்கியாமான பொது இடங்களில் அனும… Read More
  • விதைக்KALAM: விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வுவிதைக்KALAM: விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வு:     22/11/2015 இன்று காலை ஆறரை மணிக்கு விதைக்கலாம் இயக்கத்தின் பயணம் துவங்கியது. மழை மீண்டும் வலுக்க வேறு வழியே இல்லாமல் ராயல் பேக்ஸில...… Read More
  • விதைக்கலாம் அமைப்பின் 23ம் நிகழ்வு ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விதைக்கலாம் ப்ளாக்கில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி முடிந்தவரை விதைக்கலாம் ப்ளாக் அவ்வபோது அப்டேட் செய்யப்படும் என நம்புவோமாக. இனி வரும் காலங்களில் இந்த தளமானது விதைக்கலாம் நிகழ்வுகள் ப… Read More
  • விதைக்கலாம் அமைப்பின் 12ம் நிகழ்வு   நமது அமைப்பின் 12ம் நிகழ்வு பயணம் பனையப்பட்டி SMMAR அலமேலு அருணாச்சலம் உயர்நிலைப்பள்ளி நோக்கி சென்றோம். அங்கே மாணிக்கம் அய்யா மற்றும் சண்முகம் அய்யா இருவரும் மரக்கன்று நடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தி… Read More

3 comments:

Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts