FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Sunday, October 04, 2015

விதைக்கலாமின் ஆறாவது நிகழ்வு 

                                         விதைக்கலாமின் ஆறாவது நிகழ்வு (04/10/2015) இன்று புதுக்கோட்டை அய்யர் குளம் குழந்தைகள் மையத்தில் அரங்கேறியது. மரக்கன்றுகள் நட ஏதுவாக குழிகள் அனைத்தும்  (03/10/2015) அன்று அமைப்பை சேர்ந்த  திரு.ஸ்ரீ மலையப்பன் , திரு.கார்த்திகேயன், திரு.நாகபாலாஜி , திரு.ஸ்ரீதரன் அவர்களால் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது , அவர்களுக்கு அமைப்பின் சார்பாக வாழ்த்துகளும் நன்றிகளும்.
                                            
                                        மரக்கன்றுகள் அனைத்தும்  திரு.காசிபாண்டி மற்றும் திரு.முகுந்தன் அவர்களால் பெறப்பட்டது. கன்றுகளுக்கான கூண்டுகள் அனைத்தும் அமைப்பின் உறுப்பினர்களால் பெறப்பட்டது.அவர்களுக்கு அமைப்பின் வாழ்த்துகளும்,நன்றிகளும்.
                             
                              காலை 6.30 மணி அளவில் நிகழ்வு தொடங்கியது, முதல் கன்றை குழந்தைகள் மைய ஆசிரியை திருமதி.கல்யாண மீனாட்சி அவர்களால் நடப்பட்டது. மேலும் உள்ள கன்றுகளை திரு.அப்துல்லா, திரு.மனோஜ் உள்ளிடோரால் நடப்பட்டது.

                                           இதை தொடர்ந்து விதைக்கலாமின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. மரக்கன்றுகள் எளிதில் பெற ஆலோசனைகள் உறுப்பினர்களிடம் பெறப்பட்டது.

                                 ஆலோசனைக்கு பிறகு  மரக்கன்றுகளை நாமே தயார் செய்ய  அனைவராலும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. மரக்கன்றுகளை தயார் செய்யும் முழு பொறுப்பையும் திரு.நாகபாலாஜி அவர்கள் ஏற்று கொண்டார், அவருக்கு அமைப்பின் சார்பாக வாழ்த்துகளும் நன்றிகளும். 

                                    மரக்கன்றுகள் மற்றும் கூண்டுகள் வாங்க திரு.குணசேகரன், திரு.ஸ்ரீதரன் ஆகியோரால்  தலா ரூபாய் 200 நன்கொடையாக வழங்கப்பெற்றது.

                                         
                                   
Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts