FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Sunday, November 22, 2015

விதைக்KALAM: விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வு:     22/11/2015 இன்று காலை ஆறரை மணிக்கு விதைக்கலாம் இயக்கத்தின் பயணம் துவங்கியது. மழை மீண்டும் வலுக்க வேறு வழியே இல்லாமல் ராயல் பேக்ஸில...
 

  22/11/2015 இன்று காலை ஆறரை மணிக்கு விதைக்கலாம் இயக்கத்தின் பயணம் துவங்கியது. மழை மீண்டும் வலுக்க வேறு வழியே இல்லாமல் ராயல் பேக்ஸில் முடங்கினோம். சிறிது நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு. 

   Balaji அண்ணே மண்வெட்டி பிடி கழண்டுவிட்டது. இங்கே நல்ல மழை என்ன செய்யலாம். 

     கார்த்தியும் வீரமாத்தி சுரேஷ் அவர்களும் ஏதும் மழை பாதுகாப்பு உடையில் வராததால் இபு அவனது மைக்ராவில் அவர்களை அழைத்துவர நாங்கள் கூண்டுகளை எடுத்துக்கொண்டு திருநகருக்கு புறப்பட்டோம். 

   மேட்டுப்பட்டி அருகே இருக்கும் திருநகரின் சமுதாயக் கூடத்தின் அருகே பத்து கன்றுகளை நடத் திட்டம். அங்கே ஒரு குழு ஏற்கனவே பணியில் இருந்தது. பாக்கியராஜ், பாலாஜி மற்றும் ஸ்ரீதர்! சார் இப்படி மழை பேயுதே கன்றுகள் பிழைக்குமா என்று கவலையோடு கேட்டது அந்தக் குழு. நிகழ்வை நடத்த முடியுமா என்று கேள்விகள் எழுந்தன. வேலை துவங்கியவுடன் அந்தச் சந்தேகங்கள் பறந்து எட்டரை மணிக்குள் ஆறு கன்றுகளை நட்டது குழு! 

   தீபாவளி வணிகத்திற்கு பிறகு முதல் முதலாக மீண்டும் இயக்கத்தில் இணைந்த வீரமாத்தி சுரேஷ் பணியினை பெரு மகிழ்வுடன் செய்தார். அவருக்கு ஒரு ஸ்பெசல் நன்றி. 

   நிகழ்வின் நடுவே அலைபேசியில் அழைத்து வாழ்த்திய ஆசிரியர் சோம சுந்தரம் அவர்களுக்கும் நன்றிகள். இத்துடன் மொத்தம் நூற்றி தொண்ணூற்றி ஒரு கன்றுகள் என்று கருதுகிறேன். இயக்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

     அடுத்த நிகழ்வு வள்ளலார் இல்லம் ஏ.மாத்தூர்.

  29/11/2015 காலை ஆறுமணிக்கு இம்பாலா உணவகம் எதிரே இருந்து பயணத்தை துவக்கிறோம். பசுமை நேசர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 

அனைவரும் வருக.





Tuesday, November 17, 2015



  நமது அமைப்பின் 12ம் நிகழ்வு பயணம் பனையப்பட்டி SMMAR அலமேலு அருணாச்சலம் உயர்நிலைப்பள்ளி நோக்கி சென்றோம். அங்கே மாணிக்கம் அய்யா மற்றும் சண்முகம் அய்யா இருவரும் மரக்கன்று நடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அவர்களுக்கு அமைப்பின் சார்பில் நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.

  காலை 7.00 மணியளவில் பயணம் துவங்கியது. 5.00 மணியளவில் இருந்தே சரியான மழை. இதற்குத்தானே அனைத்தும் என்று ஒருபுறம் மகிழ்வாய் இருந்தாலும், என்ன செய்யப்போகிறோம் என்ற பதற்றமே மிஞ்சியிருந்தது.

  சரியாக 6.00 மணியளவில் கஸ்தூரி அய்யா இரு மகிழுந்துகளை தயார் செய்தார். அதில் நமது உறுப்பினர் கார்த்தி அய்யா அவர்களின் மகிழுந்தும் ஒன்று.இன்னுமொரு மகிழுந்து அவருடைய சகோதரியுடையது என்றார். இவர்கள் இருவருக்கும் அமைப்பின் சார்பில் நன்றிகள்.

  காலை 7.30 மணியளவில் பள்ளி வளாகத்திற்குள் 5 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கு அனுமதி அளித்த தலைமையாசிரியர் உட்பட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள். இதுவரை விதைக்கலாம் அமைப்பின் மூலமாக சுமார் 183 மரக்கன்றுகள் விதைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறோம்.

  நமது அமைப்பின் 13ம் பயணத்தில் திருநகர் பகுதிக்கு செல்லவிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.

நன்றி.

Wednesday, November 11, 2015


                           விதைக்கலாம் அமைப்பின் 11ம் நிகழ்வு சமஸ்கிருத ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
                          
                           அன்று காலை 7 மணியளவில் அமைப்பு சகோதரர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது.
                          
                           இதில் சிறப்பு அழைப்பாளராக திரு. சபா ரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை மற்றும் சில அறிவுரைகள் சொன்னார்.
                          
                           மேலும் தலைமையாசிரியர் திரு சேகர் அவர்களும், அறிவியல் ஆசிரியர் திரு ராமச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
                          
                           அன்று வளாகத்தில் 5 மர கன்றுகள் நடப்பட்டு அதற்கு கூண்டுகளும் பொருத்தப்பட்ட்து.

                          
பங்குபெற்றவர்கள் :
                          
                           மணிசங்கரன் சார், சபா ரத்தினம், கஸ்துரி ரங்கன், ராமசந்திரன், சேகர், சந்தோஷ்,ராமலிங்கம், நாகநாதன், பாக்கியராஜ், காசிப்பாண்டி, ஸ்ரீ மலையப்பன், UK கார்த்திகேயன்.


நாள்: 1/11/2015 காலை :7.30 மணியளவில்
இடம்: வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளி
சிறப்பு அழைப்பினர்கள்:
திரு. Y. ஜெயராஜ் தலைமையாசிரியர், வயலோகம் அரசினர் மேல்நிலைப்பள்ளி
திரு. A.கோபாலகிருஷ்ணன் இரவு காவலர், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி
திரு. V.கவியரசன் மாணவர், அரசு மேல்நிலைப்பள்ளி
திரு. R.பாஸ்கர் கணக்காளர், வீரமாத்தி சுரேஷ்

நோக்கம்:
மரக்கன்றுகள் = 12 நடப்பட்டது
கூண்டுகள்= 10 பொருத்தப்பட்டது

பேசப்பட்டவை:
மழைகாலங்களில் அமைப்பின் சார்பின் வாங்க ஆலோசிக்கப்படுகிறது.
அடுத்த இடம் ஓரியண்டல் பள்ளி தேர்வு நன்றி தெரிவிப்பு திரு.காசிபாண்டி அமைப்பு உறுப்பினர்

நன்றி:கார் உதவி

நாகநாதன் கார்த்திக் வீரமாத்தி சுரேஷ் இப்ராஹீம்

பள்ளித் தலைமை ஆசிரியர் அய்யா ஜெயராஜ் அவர்கள் அமைப்பிற்கு ரூ.2000 வழங்கி சிறப்பித்தார்.

இன்று (25/10/15) விதைக்கலாமின் ஒன்பதாவது நிகழ்வு புதுக்கோட்டை காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அரங்கேறியது இம்முறை 19 கன்றுகள் நடப்பட திட்டமிடப்பட்டு, அதற்கான குழிகள் அனைத்தும் அப்பள்ளியின் மூலமே அமைக்கபட்டுயிருந்தது கூண்டுகளும் பள்ளியின் மூலமாகமே பெறப்பட்டிருந்தது. கன்றுகள் அனைத்தும் விதைக்கலாமின் அமைப்பை சேர்ந்தவர்களால் அரி மளதிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்தது. நிகழ்வு காலை 6.15 மணிக்கு தொடங்கியது முதல் கன்றை பள்ளி மாணவன் மூலமாக நடப்பட்டு, மேற்பட்ட கன்றுகள் அனைத்தும் அமைப்பை சேர்ந்தவர்களால் சீராகவும் நேர்த்தியாகவும் நடப்பட்டது. நிகழ்விற்கு ஏற்பாடு செய்த விதைக்கலாம் அமைப்பின் உறுப்பினர் சாந்தகுமார் அவர்களுக்கும், பள்ளித்தலைமயாசிரியர் ராஜு அய்யா அவர்களுக்கும், 20 கன்றுகளுக்கும் கூண்டுகள் மற்றும் குழிகள் அமைத்துதந்த கண்ணன் அய்யா அவர்களுக்கும் அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகள். நிகழ்வில் ராமலிங்கம், இளவரசன், முகுந்தன், மாணவர்கள் சஞ்சய், நிஷா, சௌந்தர்யா, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ஷீலா, சந்தோஷ், பாக்கியராஜ், கஸ்தூரி ரெங்கன், பாண்டியன், அப்துல் ஜலில், மணி சார், காசிப்பாண்டி, UK கார்த்திகேயன், பிரபாகரன், ஸ்ரீதரன், வீரமாத்தி சுரேஷ், நாகநாதன், நாகபாலாஜி, ஸ்ரீமலையப்பன், வசந்தா, ராணி ரமாதேவி, ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Saturday, November 07, 2015

இன்று 15-10-2015 மறைந்த மேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஆ.பெ.ஜ அப்துல் கலாம் அய்யா அவர்களின் 85- வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக கிள்ளனூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள பூவன்குலத்தில் 85 மறக்கன்றுகள் நடுவதாக முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கிள்ளனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமிகு.ச. கோவிந்தசாமி அய்யா அவர்களின் மகன் திருமிகு சோ. சின்னப்பா மற்றும் ஊர் மக்களின் உதவியினால் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. 85 கன்றுக்கான குழிகள் அனைத்தும் ஊர் மக்களால் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு தாயார் நிலையில் இருந்தது. மரக்கன்றுகள் அனைத்தும் கிராம மக்காளால் பெறப்பட்டிருந்தது. மேலும் கன்றுகளுக்கான கூண்டுகள் அனைத்தும் விதைக்காலம் அமைப்பின் மூலம் அளிக்கப்பட்டது. மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக கவிஞர். திருமிகு. முத்துநிலவன் அய்யா அவர்களும், திருமிகு. பொன். கருப்பையா அய்யா அவர்களும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர். நிகழ்வின் முதல் கன்றை ஊராட்சி மன்ற தலைவர் அய்யா அவர்களால் நடப்பட்டது. இரண்டாவது கன்று நிலவன் அய்யா அவர்களாலும், மூன்றாவது கன்று பொன். க அய்யா அவர்களாலும் மற்றும் விதைக்கலாமில் பங்குபெற்ற அணைத்து உறுப்பினர்களாலும் மற்றும் ஊர் பொதுமக்களாலும் நடப்பட்டது. மேலும் சிறப்பாக இன்றைய நிகழ்வின் 54 – வது கன்றானது விதைக்காலாம் அமைப்பின் 100 – வது கன்று என்பதை பெருமகிழ்ச்சியுடன் அமைப்பின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். 85 கன்றுகள் சிறப்பான முறையில் நடப்பட்டு மேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஆ.ப.ஜ அப்துல் கலாம் அய்யா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. நிகழ்வில் திருமிகு வீரகுமார், வீரமாத்தி சுரேஷ், கனகமணி, அழகுராஜ், பாண்டியன், நாகராஜன், மூர்த்தி, அப்துல் ஜலில், நடராஜன், பால்ராஜ், சக்திவேல், கோபால், செல்லையா, காந்திநாதன், பிச்சை, மணி, ராமையா, கனகராஜ், ராமதாஸ், UK கார்த்திகேயன், முகுந்தன், மணி சங்கரன், கஸ்துரி ரெங்கன், நாகபாலாஜி, ஸ்ரீமலையப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர். எட்டாம் நிகழ்வு மாந்தாங்குடி MA பால் பண்ணையில் நடைபெறும் என்பது அமைப்பினருக்கு தெரிவிக்கப்பட்டது.


விதைக்கலாம் அமைப்பின் ஏழாம் நிகழ்வில் இன்று (11-10-2015) கம்பன் நகரில் திரு. எஸ். வெங்கடசுப்ரமணியன் அய்யா அவர்களின் வீட்டின் முன்பாக 5 மரங்கள் நடப்பட்டன. அவருடைய துணைவியார் மற்றும் அவருடைய மகன் செல்வன். சுப்பிரமணியன் கிரி ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பாக நடத்த உதவி புரிந்தனர். அவர்களுக்கு அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
அதன்பின் நம்முடைய அமைப்பின் சிறப்பு நிகழ்வாக வலைபதிவர் சந்திப்பு திருவிழா 2015 முன்னிட்டு நிகழ்சி நடைபெறும் இடமான ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தின் பின்புறமுள்ள தேவாலயத்தில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த சிறப்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்து விதைக்க்கலாமிற்கு வாய்ப்பு வழங்கிய திருமிகு. முத்துநிலவன் அவர்களுக்கும் ஏனைய வலைப்பதிவர் சந்திப்பு குழுவிற்கும், வலைப்பதிவர் நிகழ்விற்கு வருகை தந்து விதைக்கலாமை முதல் நிகழ்வாக ஏற்படுத்தி தந்த அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வலைபதிவர்களுக்கும் ஏனைய நல்ல உள்ளங்களுக்கும் விதைக்கலாம் அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துகொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
நிகழ்வில் விதைக்கலாம் உறுப்பினர்கள் சந்தோஷ், பாக்கியராஜ், கஸ்தூரி ரெங்கன், பாண்டியன், அப்துல் ஜலில், மணி சார், காசிப்பாண்டி, UK கார்த்திகேயன், பிரபாகரன், ஸ்ரீதரன், வீரமாத்தி சுரேஷ், நாகநாதன், பழ. சுகந்தராஜன், நாகபாலாஜி, ஸ்ரீமலையப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கடுத்த சிறப்பு நிகழ்வு கிள்ளனூரில் நடைபெருவதைப்பற்றி அமைப்பினருக்கு தெரிவிக்கப்பட்டது.

Sunday, October 04, 2015

விதைக்கலாமின் ஆறாவது நிகழ்வு 

                                         விதைக்கலாமின் ஆறாவது நிகழ்வு (04/10/2015) இன்று புதுக்கோட்டை அய்யர் குளம் குழந்தைகள் மையத்தில் அரங்கேறியது. மரக்கன்றுகள் நட ஏதுவாக குழிகள் அனைத்தும்  (03/10/2015) அன்று அமைப்பை சேர்ந்த  திரு.ஸ்ரீ மலையப்பன் , திரு.கார்த்திகேயன், திரு.நாகபாலாஜி , திரு.ஸ்ரீதரன் அவர்களால் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது , அவர்களுக்கு அமைப்பின் சார்பாக வாழ்த்துகளும் நன்றிகளும்.
                                            
                                        மரக்கன்றுகள் அனைத்தும்  திரு.காசிபாண்டி மற்றும் திரு.முகுந்தன் அவர்களால் பெறப்பட்டது. கன்றுகளுக்கான கூண்டுகள் அனைத்தும் அமைப்பின் உறுப்பினர்களால் பெறப்பட்டது.அவர்களுக்கு அமைப்பின் வாழ்த்துகளும்,நன்றிகளும்.
                             
                              காலை 6.30 மணி அளவில் நிகழ்வு தொடங்கியது, முதல் கன்றை குழந்தைகள் மைய ஆசிரியை திருமதி.கல்யாண மீனாட்சி அவர்களால் நடப்பட்டது. மேலும் உள்ள கன்றுகளை திரு.அப்துல்லா, திரு.மனோஜ் உள்ளிடோரால் நடப்பட்டது.

                                           இதை தொடர்ந்து விதைக்கலாமின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. மரக்கன்றுகள் எளிதில் பெற ஆலோசனைகள் உறுப்பினர்களிடம் பெறப்பட்டது.

                                 ஆலோசனைக்கு பிறகு  மரக்கன்றுகளை நாமே தயார் செய்ய  அனைவராலும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. மரக்கன்றுகளை தயார் செய்யும் முழு பொறுப்பையும் திரு.நாகபாலாஜி அவர்கள் ஏற்று கொண்டார், அவருக்கு அமைப்பின் சார்பாக வாழ்த்துகளும் நன்றிகளும். 

                                    மரக்கன்றுகள் மற்றும் கூண்டுகள் வாங்க திரு.குணசேகரன், திரு.ஸ்ரீதரன் ஆகியோரால்  தலா ரூபாய் 200 நன்கொடையாக வழங்கப்பெற்றது.

                                         
                                   

Sunday, September 27, 2015

இன்றைய ஐந்தாம் பயணம் இனிதே நிறைவடைந்தது. வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இன்றைய முக்கிய நிகழ்வாக கிள்ளனுர் ஊராட்சி தலைவரின் கோரிக்கையான 85 மர கன்றுகள் நட வேண்டும் என்ற வேண்டுதலை நமது அமைப்பு மிக்க மகிழ்ச்சியுடன் பரிசீலிக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம். மேலும் நமது அமைப்பின் உறுப்பினரான அய்யா திரு. மணி சங்கர் அவர்கள் இன்று ருபாய் 5000 நன்கொடையாக நமது அமைப்பிற்கு அளித்தார். அதற்க்கு அமைப்பு, அய்யா அவர்களுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறது. விதைக்கலாம் பணி சிறக்க ஒன்றுகூடுவோம் வென்று கட்டுவோம்.

\



Sunday, September 20, 2015

நான்காம் நிகழ்வு:

                            விதைக்கலாம் அமைப்பின் நான்காம் நிகழ்வு இன்று (20-09-2015) இனிதே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சந்தைபேட்டை- புதுக்கோட்டையில் நிறைவுபெற்றிருக்கிறது.இன்றைய நிகழ்வில் 3 கன்றுகளும் இரண்டு போத்துகளும் நடப்பட்டன. நிகழ்விற்கு ஏற்பாடு செய்து தந்த கவிஞர்.கீதா அம்மா அவர்களுக்கு நன்றிகள் .

                           நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக  சுரபி அறக்கட்டளை நிறுவனத்தார் திரு. சேதுமுதுராஜ், திரு. குமார், திரு. ஸ்டாலின், திருமதி. ஜெகதீஸ்வரி ஆகியோர் பங்குபெற்று நிகழ்வினை சிறப்பு செய்தனர். இன்றைய  முதல் கன்று இவர்கள் மூலம் நடப்பட்டது .... சுரபி பற்றி சில வரிகள்

                             மதுரை வீதிகளில் 165 மனநலமற்றோர் இருக்கிறார்கள்,
கடந்த சில ஆண்டுகளாக இரண்டு இளைஞர்கள் இவர்களுக்கு ஒருவேளை உணவை வழங்கி வருகிறர்கள்  சேதுமுத்துராஜ் மற்றும் குமார் என்கிற இளைஞர்கள் இருவரும் உணவினைச் சமைத்து எடுத்துக்கொண்டு காலைவேளையில் மதுரை நகரில் தெருக்களில் இருக்கும் மனநலமற்ற மனிதர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.


                        காலை உணவிற்கு பின்னர் இவர்கள் எங்காவது சென்றுவிட்டு பின்னர் புறப்பட்ட இடத்திற்கே வரும் பழக்கத்தில் இருப்பதால் காலை ஒருவேளை மட்டுமே உணவு வழங்க முடிகிறது என்றும் விளக்கினார்கள்.

                        ஆசிரியர் பயிற்சிக்குப் பிறகு, ஆண் செவிலியர் பயிற்சியும் முடித்த திரு.சேது இவர்களில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சையும் அளித்துவருகிறார்.
அதிகாலை மூன்றுமணிக்கு எழு்ந்து சமைக்கும் குமார் சுரபிக்கு கிடைத்த பரிசு.
பாரதி சொல்லும் ஒரு வரிதான் நினைவில் எழுகிறது
                                  ஊருக்கு உழைத்திடல் யோகம்
                                  அது எல்லோருக்கும் அமையாது

                       சுரபியின் ஒரு நாள் செலவு 3800 ரூபாய்கள்,ஒரு மாத செலவு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள்! மதுரையின் பலபகுதிகளில் இருக்கும் சந்தை வியாபாரிகள் சுரபி பற்றி அறிந்து ஒரு கிலோவிற்காண விலையில் மூன்று கிலோ காய்கறிகளை தந்து வருகிறார்கள். அந்த எளிய விவசாய மனிதர்கள் உண்மையில் எவ்வளவு பெரியவர்கள்.

                  சில மளிகைக்கடைகள் இவர்களுக்கு பொருட்களை இலவசமாகவோ குறைந்த விலைக்கோ தருவதால் சுரபி தொடர்ந்து செயல்படுகிறது. இப்படி எளிய மனிதர்களின் பங்களிப்போடு தொடர்ந்து வருகிறது சுரபி தனது சேவையினை..... ( சுரபி வரலாறு  கஸ்தூரி ரங்கன்அய்யாவின் முகநூல் பக்கத்திலிருந்து)

                அடுத்ததாக அமைப்பிற்கு சட்ட ஆலோசனை வழங்க வேண்டி மதுரை உயர்நீதிமன்ற கிளையிலிருந்து திரு. பரஞ்சோதி (வழக்கறிஞர்)  அவர்கள் வருகை தந்து தகுந்த ஆலோசனைகளை வழங்கி சென்றுள்ளார்கள்.

               புதிய உறுபினர்களாக திரு. வீரமாத்தி சுரேஷ் அய்யா மற்றும்  சுகந்தன் அய்யா ஆகியோர் இணைந்தனர்.

            சுரபி அறக்கட்டளைக்கு விதைக்கலாம் அமைப்பினரால்  ரூ.4200 நன்கொடை வழங்கப்பட்டது. அமைப்பின் மூத்த உறுப்பினர் திரு மணி சங்கரன் அய்யா வழங்க திரு. சேது அவர்கள் அதை பெற்றுக்கொண்டார்.

          விதைக்கலாம் அமைப்பின் உறுப்பினர் திரு. சந்தோஷ் அவர்கள் ரூ. 800 அமைப்பிற்காக  வழங்கினார். அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

          இறுதியாக பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திரு. ரவிச்சந்திரன் அய்யா அவர்கள் நன்றி கூறினார்.
              
          

     










          
                                                                                       நன்றிகளுடன்,

                                                                     விதைக்KALAM அமைப்பினர்.
              

                          
                    

Sunday, September 13, 2015

                             
மூன்றாம் நிகழ்வு 


                        விதைக்கலாமின் மூன்றாம் நிகழ்வு இன்று (13-09-2015) புதுக்கோட்டை த.சு.லு.தி (TELC) மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. விதைக்கலாமின் அனைத்து உறுப்பினர்களும் நிகழ்வில் பங்குபெற்றனர். 

                              காலை 6.30 மணியளவில் நிகழ்வு தொடங்கியது, முதல் கன்றை  திரு. கிருபாகரன் அய்யா மற்றும் திரு சிவராஜா அய்யா இருவரும் இணைந்து நட்டனர் மற்ற கன்றுகளும் புதிதாக வந்த உறுப்பினர்களால் நடப்பட்டது. நிகழ்வில் புதிய உறுப்பினர்களாக திரு. அப்துல் ஜலில், திரு. நாகநாதன் மற்றும் திரு. முகமது இப்ராகிம் ஆகியோர் இணைந்தனர்.

          இந்த நிகழ்வைத் தொடர்ந்து விதைக்கலாமின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 

                        திரு. காசிப்பாண்டி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

                     கூட்டத்தின் முதல் நிகழ்வாக திரு. முத்துநிலவன் அய்யா அவர்கள் அமைப்பிற்காக ரூ. 1000 வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது ( அய்யா நிதி அளித்ததே மெய்சிலிர்க்க வைத்த  இனிப்பான சம்பவம். அதைப்பற்றி ஒரு பெரிய பதிவை பிறகு வெளியிடுகிறேன்). 

       கூட்டத்தில் அமைப்பை அங்கிகரிக்கப்பட்ட அமைப்பாக மாற்றுவதற்காக சட்ட ஆலோசனை  பெற அறிவுறுத்தப்பட்டது. 

                         மரக்கன்றுகளை இன்னும் எளிதாக பெற ஆலோசனை கேட்கப்பட்டது.

                          ஏற்கனவே நட்ட மறக்கன்றுகளைப்பற்றி நலம் விசாரிக்கப்பட்டது.

     அடுத்த நிகழ்விர்க்கான இடமாக அரசு மேல்நிலைப்பள்ளி சந்தைப்பேட்டை தெரிவுசெய்யப்பட்டது.

                           நிதி வரவு- செலவு பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

                   திரு. நாக பாலாஜி அவர்கள் 10 நிமிடங்கள் மியுடுவல் பண்ட்ஸ் பற்றி விளக்கமளித்தார்.
                          
                    திரு. கிருபாகரன் அய்யா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் 

                 திரு. முகமது இப்ராகிம் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவருக்கு திரு. மணிசங்கரன் அய்யா அவர்களின் கைகளால் ஒரு மரக்கன்று பரிசளிக்கப்பட்டது.
          
   25 மரக்கன்றுகளை  அமைப்பிற்காக வழங்கிய திரு. உதயகுமார் அய்யா (தோட்டக்கலைத்துறை) அவர்களுக்கு நன்றிகூறப்பட்டது.

                     இறுதியாக  திரு கஸ்தூரி ரெங்கன் அய்யா அவர்கள் நன்றி கூறினார்.

                   அமைப்பு உறுப்பினர் திரு. பாக்கியராஜ் அவர்களின் முயற்சியால் அமைப்பின் மூலமாக பீ  வெல் மருத்துவமனை முன்பாக  வைக்கப்பட்ட கன்றுகள் பார்வையிடப்பட்டது.


                                                                                                                                   









                                    

                                                                                                                                                              நன்றிகளுடன் 
                                                                                                                                           
                                                                                                                                         விதைக்KALAM அமைப்பினர் 

                                 

Monday, September 07, 2015

விதைக்கலாம் இரண்டாவது நிகழ்வு

வணக்கம்

          விதைக்கலாமின் முதல் பயணம் இலுப்பூரில் (30/08/15) தொடங்கி வெற்றி அடைந்ததை தொடர்ந்து தனது இரண்டாவது பயணத்துக்கு தயாரானது.

           அமைப்பின் இரண்டாவது நிகழ்வு எல்லைபட்டி அரசு
உயர் நிலைப்பள்ளியில் (06/09/15) அரங்கேறியது. மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திரு.கஸ்தூரிரெங்கன் அய்யா (எல்லைபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்) மூலமாக தயார் செய்யப்பட்டு இருந்தது அதற்காக அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...

         காலை 6.30 மணிக்கு விதைக்கலாமின் அமைப்பை சேர்ந்த திரு.கஸ்தூரிரெங்கன் அய்யா,  திரு.கார்த்திகேயன்,  திரு.ஸ்ரீ மலையப்பன்,  திரு.பாக்கியராஜ் ,  திரு.நாக பாலாஜி ,  திரு.காசிபாண்டி ,  திரு.சாந்தகுமார் ,  திரு.இராமலிங்கம் ,  திரு.குணசேகரன் ,  திரு.முகுந்தன் ,  திரு.சந்தோஷ் ,  திரு.ஸ்ரீதரன் ஆகிய அனைவரும் எல்லைபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து தங்கள் முழு பங்களிப்பையும் அளித்தமைக்காக வாழ்த்துகளும் நன்றிகளும்.

          மேலும் இக்குழுவில் இவர்களுடன் இணைந்த திரு.சோமசுந்தரம் அய்யா,  திரு. ஐய்யர் மணி ஷங்கர் அய்யா , அவர்களுக்கும் அமைப்பின் சார்பாக வாழ்த்துகளும் நன்றிகளும்.

         அமைப்பின் இரண்டாவது நிகழ்வில் 6 மரக்கன்றுகள் நடப்பட்டது மேலும் மரக்கன்றுகள் அனைத்திற்கும் கூண்டுகளும் நிறுவப்பட்டது.

        நிகழ்விற்கான மரக்கன்றுகளை வழங்கிய திரு.ஸ்ரீ மலையப்பன் ,  திரு.சாந்தகுமார்  அவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும். நிகழ்விற்கான கூண்டுகளை வழங்கிய திரு.நாகபாலாஜி , திரு.ஸ்ரீதரன் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

        விதைக்கலாம் அமைப்பில் இந்த வாரம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. திரு. சோமசுந்தரம் அய்யா அவர்களும் மற்றும் திரு. அய்யர் மணிசங்கரன் அய்யா அவர்களும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். குழுவில் அதம்னை பரிசிலித்து தக்க முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த நிகழ்வு வரும் ஞாயிறு அன்று புதுக்கோட்டை டி.இ.எல்.சி மேல்நிலைப்பளியில் நந்திபெற உள்ளது. அந்த நிகழ்வில் பங்கேற்க அனைத்து நண்பர்களையும் இதன்மூலம் வரவேற்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்...


                                                                                           நன்றிகளுடன்
                                                                         விதைக்KALAM குழுவினர்

   













        

Wednesday, September 02, 2015

விதைக்கலாம் முதல் நிகழ்வு

வணக்கம் நண்பர்களே!
         நமது அமைப்பின் முதலாவது நிகழ்வு 30/08/2015(ஞாயிற்றுகிழமை) அன்று அரங்கேறியது. கலாமினால் ஒன்று திரண்ட அமைப்பின் நோக்கம் இனிதே துவங்கப்பட்டது.

         முதல் நிகழ்வு இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரங்கேறியது. அமைப்பின் முதல் வாய்ப்பை தானாக முன்வந்து ஏற்றுக்கொண்ட திரு.காசிபாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

        முதல் நிகழ்வில் தங்கள் முழு ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் அளித்த திரு.கஸ்தூரிரெங்கன்  அய்யா , திரு.காசிபாண்டி , திரு.கார்த்திகேயன், திரு.ஸ்ரீமலையப்பன், திரு.பாக்கியராஜ், திரு.பிரபாகரன், திரு.நாகபாலாஜி ஆகிய அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

       அமைப்பின் முதல் நிகழ்வில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் மரக்கன்று அனைத்திற்கும் கூண்டுகளும் நிறுவப்பட்டது.

      மரக்கன்றுகள் அனைத்தும் காலை 8.30 மணிக்குள் நடப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது. அனைவர் மனதிலும் அமைப்பு துவக்கப்பட்ட மகிழ்ச்சி துளிர்விட்டது.

     நிகழ்விர்க்கான பேனரையும் மற்றும் மரக்கன்றுகளையும் ஏற்பாடு செய்துகொடுத்த திரு. ராமலிங்கம் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். பேனரை வரைந்து கொடுத்த திரு பன்னீர்செல்வம் அய்யா அவர்களுக்கு நன்றிகள்...

    முதல் நிகழ்விற்கு இடமளித்த பள்ளி தலைமையாசிரியர் அவர்களுக்கு நன்றிகள்.  அடுத்த நிகழ்விற்கான இடம் முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. நிகழ்வில் சிற்சில காரணங்களால்  கலந்துகொள்ள முடியாமல் இருந்தாலும் இந்த அமைப்பிற்கு ஊன்றுகோல்கலாய்  இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் இல்லாமல் இது சாத்தியப்படவில்லை...

                                                                                                  நன்றிகளுடன்,
                                                                                      விதைக்KALAM குழுவினர்.

                                                                                                           

       










Saturday, August 22, 2015


விதைக்கலாம் ஒரு அறிமுகம்

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் துவக்கப்பட்ட அமைப்பு.

பேராளுமைகளின் மறைவு பெரும் அதிர்வலைகளை உருவாக்குகிறது. அரிதான சந்தர்பங்களில் அது  ஆக்கபூர்வமான செயல்களை விளைவிக்கிறது.

இளம் தலைமுறை இன்னும் சமூக நலன்  சார்ந்து இயங்குகிறது என்பதற்கான நம்பிக்கையின் இன்னொரு சாட்சி இந்த இயக்கம்.

புதுகையில் இதுவரை பொது வாழ்வில் பொது வெளியில் தெரியாத இளைஞர்கள் இந்த அமைப்பின் பலம்.

நோக்கம்

ஒவ்வொரு ஞாயிறும் மரக்கன்றுகளை அவற்றை பாதுகாப்பாக  வளர்க்க உறுதி தரும் வளாகங்களில் கன்றுகளை நட தொடர்ந்து பராமரிக்க தீர்மானித்திருக்கிறது.


11/08/2015 அன்று முதலில் இணைந்த இந்தக் குழு  இதுவரை பதினான்கு உறுதிமொழிகள் வரப் பெற்றிருக்கிறது.

வாருங்கள்

ஒன்றா கலாம்

விதைக் கலாம்

நோக்கம் உங்களுக்கு விருப்பமானதாக  இருந்தால் நீங்களும் விதைக் கலாமே

குழுவினர். 
Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Blog Archive

Popular Posts