FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Saturday, June 04, 2016

விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். 41-ம் பயண அழைப்பு நாளை (5-6-2016) காலை 5.30 மணியளவில் நமது 41-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை அடப்பன் வயல் இறைவன் நகர் அருகில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவினர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம். கூடும் இடம் : இம்பாலா ஹோட்டல் மேலும் விபரங்களுக்கு www.vithaikkalam.blogspot.in இப்படிக்கு விதைக்KALAM அமைப்பினர். நன்றி.

Thursday, May 26, 2016

விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். நமது அமைப்பை நிறுவனப்படுத்துவது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் இன்று (26/5/2016) UK Infotech இல் மாலை 7.30 க்கு நடைபெற உள்ளதால் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். 40-ம் பயண அழைப்பு நாளை (29-5-2016) காலை 5.30 மணியளவில் நமது 40-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை எல்லைபட்டி அம்மன் டீ ஸ்டால் அருகில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவினர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம். கூடும் இடம் : இம்பாலா ஹோட்டல் மேலும் விபரங்களுக்கு www.vithaikkalam.blogspot.in இப்படிக்கு விதைக்KALAM அமைப்பினர். நன்றி.

Monday, May 23, 2016

விதைக்கலாம் ௩௯

போன வாரம் திங்கள்கிழமை ஒரு அலைபேசி அழைப்பு நண்பர் மகேஷ் அசோகன் ( புதுகையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் ) அவர்களிடமிருந்து ... என்னடா இவன் திடீர்னு போன் பன்றாறேனு ஒரு பதட்டம் இருந்தாலும் எடுத்து ஹலோ என்றவுடன் ( தமிழ்ழ இந்த ஹல்லோ மாதிரி நச்சுனு ஒரு வார்த்த கண்டுபிடிங்கப்பா வணக்கத்த தவிர ) மச்சி என் நண்பன் சதீஷ் வீட்டுக்கு மரம் வைக்கணும்டா அதுவும் உடனே என்றார் ... சரி எந்த இடம் என்றவுடன் இடத்தை கேட்டு  குறிப்பெடுத்துகொண்டேன் ...

சதிஷ் ( புதுகை வசந்த் அண்ட் கோ –வின் ஊழியர் ) வீடு டீச்சர் காலனியில் 22-05-2015 காலை எப்பொழுதும்போல் சென்றுவிட்டோம் ( முதல்நாள் எத்தனை பேர் வருவீர்கள் என்று சதீஷ் கேட்டபோது ஒரு முப்பது என்றேன் போனில்  ஒரு அனாயசமான ரியாக்சன் கொடுத்தார் சதீஷ் நேரில் காணமுடியவில்லை ).


இந்தவாரம் என்னுடைய நண்பர் திரு . சங்கர்பாபு புதிய உறுப்பினராக சேர்ந்துகொண்டார் .. இந்த வாரத்தின் முதல் கன்றை சதீஷின் தந்தையும் மற்றவற்றை விதைக்கலாமின் உறுப்பினர்களும் ஒவ்வொன்றாய் வைக்க இறுதி கன்றை நண்பர் சதீஷ் வைத்து நிகழ்வை சிறப்பித்தார் .. நீண்ட நாளைக்கு பிறகு நிகழ்வில் நண்பர் திரு . சாந்தகுமார் அவர்களும் கலந்துகொண்டது மகிழ்ச்சியை தந்தது ( புது மாப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்ககது )



கூட்டத்தில் எங்களுடைய மணி சாரின் தீவிர முயற்சியில் புதுகை பாரத ஸ்டேட் தலைமை வங்கி அமைப்பிற்கு ரூ . 4000/- வழங்கியிருப்பதாக கூறி தொகையை அளித்தார் .. விதைக்கலாம் சார்பில் புதுகை பாரத ஸ்டேட் தலைமை வங்கிக்கும் அதன் முதன்மை மேலாளர் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .. நன்றி மணி அப்பா ...



அடுத்த வார நிகழ்வு எங்கள் எல்லைபட்டி அம்மன் தேநீர் விடுதியை நோக்கி ...

இதுவரை ...
நிகழ்வு                                       - ௩௯ (39)
நட்ட கன்றுகள்                               - ௪௩௧ (431)
இந்தவாரம் பார்வையிடப்பட்ட இடம்  - ஏ. மாத்தூர்
திருப்பி மாற்றவேண்டியது           - ௧





நன்றி தொடர்வோம் நண்பர்களே ....





Friday, May 20, 2016

விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். 39-ம் பயண அழைப்பு நாளை (22-5-2016) காலை 5.30 மணியளவில் நமது 39-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை காமராஜபுரம் DRR வீதி முக்கம் அருகில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவினர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம். கூடும் இடம் : இம்பாலா ஹோட்டல் மேலும் விபரங்களுக்கு www.vithaikkalam.blogspot.in இப்படிக்கு விதைக்KALAM அமைப்பினர். நன்றி.

Wednesday, May 18, 2016

விதைக்கலாமின் 38 - ஆவது நிகழ்வு புதுக்கோட்டை பூங்கா நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது .. 

நிகழ்வில் மதிப்புமிகு பிரபல  பதிவர் அய்யா . திரு . வெங்கட் நாகராஜ் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பு செய்தார்கள்  .. மிக்க நன்றி அய்யா .. 

இந்த நிகழ்விற்கு அய்யா வந்ததற்கு இரண்டு காரணங்கள்.. முதல் காரணம் மறந்த நம் அண்ணன் வைகறையின் மகன் கல்வி நிதிக்காக திரு . வெங்கட் நாகராஜ் அவர்களின் மகளுடைய சேமிப்பிலிருந்து கனிச  தொகையை வீதி அமைப்பிடம் தருவதற்காக வந்திருந்தார் ...தொகையை கீதா அம்மா அவர்களோடு விதைக்கலாமும் சேர்ந்து பெற்றுக்கொண்டது ...  கீதா அம்மாவின் வரிகளிலிருந்து 

"ஒரு சிறுபிள்ளை இன்னொரு சிறுபிள்ளையின் துயரம் உணர்ந்து என்று உதவி செய்ய முன்வந்ததோ இந்த நாடு நல்ல நிலைக்கு செல்லவிருக்கிறது" 


நிச்சயம் நடக்கும் அம்மா ...அய்யா அவர்களுக்கும் அவரது மகளுக்கும் விதைகலாமின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் ...

மேலும் அமைபிற்கு என்றும் நல்ல உந்துதல்களையும் ஊக்கத்தையும் வழங்கி எங்களை எப்பொழுதும் வழிநடத்திகொண்டிருக்கும் திருமிகு . முத்துநிலவன் அய்யா அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை விதைக்கலாமோடு கொண்டாடும் விதமாக அமைபிற்கு ரூ.1000 வழங்கினார்கள்.. அதை கீதா அம்மா மற்றும் செல்வகுமார் அண்ணா ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது .. ( விதைகலாமின் முதல் நிதியாளரும் அய்யாதான் .. குறிப்பு : இதுக்கும் மேல சொன்னா அய்யாகிட்ட  திட்டுவாங்கனும் ) .. அடுத்த நிகழ்விற்கு அய்யா வருவதாகவும் கூறியிருக்கிறார் ...( இனி நீங்களும் பிறந்தநாளை அய்யவைபோல் விதைக்கலாமோடு கொண்டாடலாமே !!!)


இந்த வார நிகழ்வில் இன்னும் கூடுதல் சிறப்பாக மூன்று புதிய நண்பர்கள் முறையே திருமிகு. சாதிக் அய்யா , ஜாபார் அய்யா மற்றும் செல்வன் . ஸ்ரீராம் புதிதாக அமைப்பில் இணைந்துள்ளார்கள் ..

38- ஆம் நிகழ்வு ஒரு பிறந்தநாள் நிகழ்வும்கூட ... நம் அருமை நண்பர் திருமிகு . சிவா ஜி ( செல்லமா பேபி ) அவர்களுக்கு  பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .. இவரைப்பற்றி விதைக்கலாம் தொடர் பதிவில் என்னுடைய வலைப்பூவில் எழுத இருக்கிறேன் ... ( தன் பிறந்தநாளில் வைகறை அண்ணாவுக்காக ரூ . 5௦௦- ஐ  கீதா அம்மாவிடம் வழங்கினார் )

மேலும் நிகழ்வை ஏற்பாடு செய்துகொடுத்த அப்பா மணி சார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அய்யா குமாரசாமி அவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் ...

இதுவரை ....

நிகழ்வு : 38

நட்ட கன்றுகளின் எண்ணிக்கை : 425

மேற்பார்வையிட்ட இடங்கள்  : 10




(திருமிகு . சிவா மற்றும் ஸ்ரீராம் மரம் நட்ட போது)



(விதைக்கலாம் புலோ அப் )


( திருமிகு . நிலவன் அய்யாவின் நிதியை கீதா அம்மாவிடமிருந்து பெற்றபோது )


(விதைக்கலாம் என்ஜாய்மென்ட் பகுதி )



( முதல் பார்வையிடல் )


(திருமிகு . சாதிக் அய்யா அவர்கள் )


(படம் - ௨)


(திருமிகு . ஜாபர் அய்யா அவர்கள் )


(திருமிகு . குமாரசாமி அய்யா அவர்கள் )


(கேக் வெட்டுதல் )


பிரபல  பதிவர் அய்யா . திரு . வெங்கட் நாகராஜ் அவர்கள் )

PC : எங்கள் அன்பு கஸ்தூரிரங்கன் அய்யா 

அடுத்த பயணம் காமராஜபுரம் நோக்கி .....



Saturday, May 14, 2016

அமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். 38-ம் பயண அழைப்பு நாளை (15-5-2016) காலை 5.30 மணியளவில் நமது 38-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை பூங்கா நகரில் உள்ள ஐயப்பன் மற்றும் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவினர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம். கூடும் இடம் : இம்பாலா ஹோட்டல் மேலும் விபரங்களுக்கு www.vithaikkalam.blogspot.in இப்படிக்கு விதைக்KALAM அமைப்பினர். நன்றி.

Saturday, February 27, 2016

விதைக்கலாம் அமைப்பின் 26ம் நிகழ்வு வாராப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.. இந்நிகழ்வில் 11 மரக்கன்றுகள் நடப்பட்டன.


நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாராப்பூர் அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திரு. கருப்பையா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.. இளம் மாணவர்களும் வழக்கம் போல இந்நிகழ்வில் நிறைய பேர் கலந்து கொண்டு நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்தனர்.
நிகழ்வுக்கு தனது டெம்போ ட்ராவலர் வாகனத்தை நட்பின் அடிப்படையில் வழங்கியிருந்தார் Pudukkottai Arunmozhi அவர்கள்..அவருக்கு இந்த இடத்தில் நம் அமைப்பு சார்பாக நன்றிகள் பல
நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
இந்நிகழ்வில் நம் அமைப்பு சார்பாக சிவக்குமார் , சந்தோஷ், மணி சார், மலையப்பன், UK கார்த்தி, காசிபாண்டி, ராமலிங்கம், பாலாஜி, பாக்கியராஜ், பாஸ்கர், குருமூர்த்தி, நாகநாதன் கலந்துகொண்டனர்
நிகழ்வு முடிந்து வரும் வழியில் பெருங்களூர் அஞ்சலக வளாகத்தில் ஏற்கனவே நட்டு வைத்திருந்த கன்றுகளை ஆய்வு செய்து வந்தோம்.. எல்லா கன்றுகளும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன என்பதை அறிந்து மகிழ்வுடன் வீடு திரும்பினோம்..
வாருங்கள் நட்புகளே தொடர்ந்து விதைக்கலாம்..

Sunday, February 14, 2016

                                                         விதைக்கலாம் 25

            அப்துல் கலாமின் கனவுகளைக் காதலிக்கும் நம் இளைஞர்கள் குழு அவரின்  நினைவைப் போற்றும் வகையில் "விதைக்கலாம்" என்கிற அமைப்பைத் துவங்கி மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்

                             31.08.2015 அன்று இலுப்பூரில் தங்கள் முதல் மரம் நடும் நிகழ்வினைத் துவக்கிய இந்த குழு பிப்ரவரி 14இல் ஐம்பது மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இது நமது இருபத்தி ஐந்தாம் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வைச் சிறப்பிக்கும் வண்ணம் சிறப்பு அழைப்பாளர்களாக புதுகை சட்டமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் தொண்டைமான் அவர்களும், நகராட்சி மன்றத்தின் தலைவர் திரு. ராஜசேகரன் அவர்களும், நகர்மன்ற துணை தலைவர் திரு. சேட் அவர்களும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டுச் சிறப்பித்தனர்.




                                 விழாவில் கலந்து கொண்ட புதுகைக் கணினித் தமிழ்ச் சங்க நிறுவனர் அய்யா முத்துநிலவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். கணினித் தமிழ்ச்சங்கம், புதுகை ஜே.சிஸ் அமைப்புகள், வீதி இலக்கிய களம் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் இந்நிகழ்வில் பங்குபெற்று சிறப்பித்தனர். நிகழ்வுக்காண நிதியை அமெரிக்கவாழ் தமிழரான திரு.பாலதண்டாயுதம் வீரையா அவர்கள் வழங்கியிருந்தது குறிப்பிடத் தக்கது.

                                  நிகழ்வில் விதைக்கலாம் உறுப்பினர்கள் ஸ்ரீனி மலையப்பன், பாலாஜி, யு கே டெக் கார்த்திக், கஸ்தூரி ரங்கன், சிவக்குமார், நாகநாதன், நாகபாலாஜி, பிரபா, பாக்யராஜ், சந்தோஷ், சுகேஷ், குருமூர்த்தி, பாஸ்கர், ராம்தாஸ் சுகந்தன், ரகுபதி, மற்றும் சேங்கைதோப்பு கால்பந்தாட்ட குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடந்து வந்த பாதை- ஒரு புகைப்பட பயணம்
                                   நமது விதைக்கலாம் அமைப்பு கடந்த 25 வாரங்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். அந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன .




























Wednesday, February 10, 2016

நமது விதைக்கலாம் 24வது நிகழ்வு பொன்னமராவதி அருகே மலையான்ஊரணி கரையில்  நடைபெற்றது. 




நமது  விதைக்கலாம் அமைப்பின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பல்வேறு முக்கியாமான பொது இடங்களில் அனுமதியுடன் இலவச மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது ..

அந்த வகையில் பொன்னமராவதி மலையான் ஊரணிக்கரையில் நடைபெற நிகழ்வில் அமைப்பின் முக்கிய நிர்வாகி இந்திரா நகர் ஆதி மெடிக்கல் சுப்பிரமணியன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முப்பத்திமூன்று மரக்கன்றுகள் ஊரணிக்கரை சுற்றி நடப்பட்டது. 



இவ்விழாவில் நிதியுதவி செய்த லிங்கபைரவி நிதியம் நிறுவனத்தின் அமைப்பினர் சரவணன் அவர்களுக்கு விதைக்கலாம் நிறுவனம் பாராட்டுக்களை வழங்கியது. இவ்விழாவில் லயன் அன்புச்செல்வன், மருத்துவர் பாலு, விதைக்கலாம் உறுப்பினர்கள் கஸ்தூரி ரெங்கன், நாகபாலாஜி, கார்த்திக்கேயன், மலையப்பன், சிவா, பாஸ்கர், நாகநாதன், முகுந்தன், ஸ்ரீதர், ரகுபதி, குருமூர்த்தி, சுகன்தன் மட்டும் உடற்கல்வி ஆசிரியர் முகமது அல்காப் ஆகியோர் கலந்துகொண்டனர்.



இந்நிகழ்வில் கலந்து கொண்ட நம் தோழர்கள் அனைவருக்கும் அன்பாய் சிற்றுண்டி மற்றும் தேநீர் விருந்து அளித்த நல்ல உள்ளங்களுக்கும் இந்த நிகழ்வில் களத்தில் எங்களுக்கு பெரும் உதவியாய் இருந்த குட்டி தோழர்களுக்கும் நன்றிகள் பல..

குறிப்பு: வரும் ஞாயிறு 14.02.2016 அன்று நமது அமைப்பு தொடங்கி 25 வாரம் கடந்து வந்திருக்கும் நிகழ்வை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து உள்ளோம். இந்த நிகழ்வில் 50 மரக்கன்றுகள் நட உள்ளோம்..நமது கொண்டாட்டம் என்பது மரங்கள் நட்டு அழகு பார்ப்பது தானே..

வாருங்கள் நண்பர்களே .. 

ஒன்றாகலாம் 

விதைக்கலாம்

Tuesday, February 02, 2016


ரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விதைக்கலாம் ப்ளாக்கில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி முடிந்தவரை விதைக்கலாம் ப்ளாக் அவ்வபோது அப்டேட் செய்யப்படும் என நம்புவோமாக. இனி வரும் காலங்களில் இந்த தளமானது விதைக்கலாம் நிகழ்வுகள் பற்றியே பதிவு மட்டும் இன்றி பல பயனுள்ள தகவல்களையும் இதன் மூலம் பதிவு செய்யலாம் என்று எண்ணம்.

கடந்தவாரம் மரம் நடும் நிகழ்வு , மனவிடுதி அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. எப்போதும் போலவே நமது விதைக்கலாம் அமைப்பினர் அதிகாலை துயில் கலைத்து களம் நோக்கி புறப்பட்டு குறிப்பிட்ட அந்த பகுதியை அடையும்போது , குளுமையான பனி நீங்கி சூரியன் சுட்டு எரிக்க தயாராக இருந்தார். பள்ளியை அடையும்போது , அந்த பள்ளியின்  தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் எங்களுக்காக காத்திருந்தனர் .

ரொம்பவே மகிழ்ச்சியான விஷயம் என்னவெனில் அந்த பள்ளி மாணவர்கள் தன்னார்வத்தோடு இந்த மரம் நடு நிகழ்வுக்கு தேவையான பெரும்பான்மையான வேலைய செய்து தயார் நிலையில் வைத்தது தான். பின் மனவிடுதி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்  அவர்கள் முதல் மரக்கன்றை நட தொடர்சியாக மூன்று மரக்கன்றுகள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும், ஊர் பெரியவர்களால் நடப்பட்டது. இந்த நிகழ்வு நடந்து கொண்டு இருக்கும்போது அந்த வழியாக வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு.ரகுபதி அவர்கள் தன்னார்வ அடிப்படையில்  இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது . 

மனவிடுதி அரசு பள்ளி தலைமையாசிரியர் அவர்கள், நம் அமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி தேநீர் விருந்து அளித்து உபசரித்தார். அவருக்கு இந்த இடத்தில் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறோம். 

இந்த நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த அனைத்து நண்பர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இவ்விடத்தில் நன்றியை சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சி. 

வாருங்கள் தொடர்ந்து விதைkalam..

Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts