விதைக்கலாம் ஒரு அறிமுகம்
புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் துவக்கப்பட்ட அமைப்பு.
பேராளுமைகளின் மறைவு பெரும் அதிர்வலைகளை உருவாக்குகிறது. அரிதான சந்தர்பங்களில் அது ஆக்கபூர்வமான செயல்களை விளைவிக்கிறது.
இளம் தலைமுறை இன்னும் சமூக நலன் சார்ந்து இயங்குகிறது என்பதற்கான நம்பிக்கையின் இன்னொரு சாட்சி இந்த இயக்கம்.
புதுகையில் இதுவரை பொது வாழ்வில் பொது வெளியில் தெரியாத இளைஞர்கள் இந்த அமைப்பின் பலம்.
நோக்கம்
ஒவ்வொரு ஞாயிறும் மரக்கன்றுகளை அவற்றை பாதுகாப்பாக வளர்க்க உறுதி தரும் வளாகங்களில் கன்றுகளை நட தொடர்ந்து பராமரிக்க தீர்மானித்திருக்கிறது.
11/08/2015 அன்று முதலில் இணைந்த இந்தக் குழு இதுவரை பதினான்கு உறுதிமொழிகள் வரப் பெற்றிருக்கிறது.
வாருங்கள்
ஒன்றா கலாம்
விதைக் கலாம்
நோக்கம் உங்களுக்கு விருப்பமானதாக இருந்தால் நீங்களும் விதைக் கலாமே
குழுவினர்.
Most welcome
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteSeiyalame.....valthukal
ReplyDeleteநல்ல முயற்சி வாழ்த்துகள்
ReplyDelete